×

பெண் கைதிகள் சென்ற வேனில் தீ


லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் மாவட்ட சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக 9 பெண் கைதிகள் அழைத்து செல்லப்பட்டனர். பாதுகாப்புக்காக 14 பெண் காவலர்கள் உடன் சென்றனர். இந்நிலையில் ராஜ்பவன் அருகே வேன் சென்றபோது திடீரென தீப்பிடித்தது. இதனால் அதில் இருந்த கைதிகள் அலறி கூச்சலிட்டனர்.

இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட போலீசார் அனைவரையும் உடனடியாக வேனில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் காவல்துறைக்கு சொந்தமான வேன் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

The post பெண் கைதிகள் சென்ற வேனில் தீ appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Uttar Pradesh ,Raj Bhavan ,
× RELATED கை, கால்களை கட்டிப்போட்டு கணவருக்கு...